இடுகைகள்

மாயவரம் இதயராஜா கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறந்த நாள் வாழ்த்து கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா மயிலாடுதுறை மாவட்டம்.

படம்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என் செல்லமே.. __________________________ அன்புள்ள மகனுக்கு அப்பாவின் கடிதம்! __________________________ இன்பா என்கிற இனியவனே -என் குரும்புக்கார முதல் மகனே.. சிறப்பாய் வாழ்ந்துநீ சிகரம் தொட -என் சீர்மிகுத் தமிழால் வாழ்த்துகிறேன்.. மழலைக் குரலில் செந்தமிழை-என் மனதில் ஊற்றும் நேரமதில் வறுமை மறந்து ரசிக்கின்றேன்!-என் வலியை மறந்து சிரிக்கின்றேன்! வானம் பார்த்து நடவாதே!- தன் மானம் காத்து நடந்துவிடு! சுயநலம் தன்னை போற்றாதே!-உன் சுற்றம் காத்து வாழ்ந்துவிடு! அன்பில் மட்டும் வளைந்து கொடு! -உனை அடைக்கிட முனைந்தால் வாளை எடு! கல்வி கலைகளில் தேர்ந்துவிடு!- என் கனவை நிறைவேற்றி வாழ்ந்துவிடு! நல்லவை அல்லவை அறிந்துவிடு! -அதில் நல்லதை மட்டும் பழகிவிடு! நண்பன் தீயவன் என்றறிந்தால்- உன் நல்லதில் சிலவற்றை பழக்கி விடு! எட்டுத் திசையும் எதிரிகளா-உன்  சிரசைச் சிறிதும் சாய்க்காதே! வீரத் தமிழன் விளைபொருள் நீ!-இதை கடைசிவரை நீ மறக்காதே! பேதம் பார்த்தல் பெருங்குற்றம்-அதை சினத்தில் கூடச் செய்யாதே! இலச்சியம் நோக்கி ஓடிடு நீ!-சிறு இடர்கண்டு இடையில் நிறுத்தாதே! அறிவைப் ப...

வரம் | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா

வரம் • நெடுநாளாய்  தவம் இருக்கிறேன்..  காதலை  வரமாகத் தருவாய் என்று.. நீயோ   கண்ணீரை வரம் தருகிறாய்..  இனியவளே.. உன் பார்வை பட்டுத்தானே கல்லாய் கிடந்த நான்  கவிஞன் ஆனேன்..? உன் நினைவுகளை கொட்டித்தானே என் சிந்தனைப் பாணையில் கவிதை சமைத்தேன்.. ? நான் இனிக்க இனிக்க  கவிதைகள் படைக்க  என் கற்பனை ஊற்றில் விழுந்த கொம்புத் தேனே நீதானே காரணம்?   கொம்புத்தேன் நீ இல்லாவிடில் நான்  கொம்பன் இல்லை கவிதையில்.. கவிக்கொம்பன் என்ற  பெயருக்கு பின்னால் வரும்  என் உண்மைப் பெயரை  சொல்லி அழை..! "என்" என்ற  வார்த்தையையோடு சேர்த்து அழை!  இந்த பிறவியில்  என் உண்மைப் பெயரை  உரிமையோடு சொல்லியழைக்க  உனக்கு மட்டுமே அனுமதி! ஆம்.. உனக்கு மட்டுமே அனுமதி..! அதே போல்  உன் கண்களை திருடி  கவிதைகள் படைக்க  என்னைக் கொஞ்சம் அனுமதி!  உன் அழகைத் திருடி அமுது படைக்க அணுவளவேனும் அனுமதி!  என் கவியேடுகள் முழுமைபெற உன் நினைவுகள் வேண்டும்! என் வாழ்க்கை முழுமைபெற  உன் காதல் வேண்டும்! இனியவளே நான்  மீண்ட...

யாரடி நீ | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

படம்
யாரடி நீ?  __________________ யாரடி நீ...? ஒரே பார்வையில் உன்னைப்பற்றியே யோசிக்க வைக்கிறாய்... உயிரைக் கயிராக்கி ஊஞ்சல்கட்டி  விளையாடுகிறாய்... காதல் தீயை  பற்றவைத்துவிட்டு கடைக்கண்களால் என்னை கடைந்தெடுக்கிறாய்... யாரடி நீ! • தீவத்திலகையாய் வந்தென்னை காதல் தீவிற்குள் விட்டுச்செல்கிறாய்..  வாச்சாயனாரின் வார்த்தைகளைத் தேடிப் புரட்டச் செய்கிறாய்.. வள்ளுவனின் காமத்துப்பாலுக்கு மட்டும் விளக்கம் கேட்டு அலையச் செய்கிறாய்... யாரடி நீ? • ஒரு சொட்டுப்  புன்னகையை வீசி என் உயிரையே உடைத்துப் போடுகிறாய்... ஒரே ஒரு வார்த்தைக்காக என் வாழ்க்கையையே உன்னிடம் யாசிக்கச் செய்கிறாய்...  விடியலை விரட்டியடித்து என்  நீண்ட கனவுகளுக்குள் எதிர்காலக் கதையளக்கிறாய்.. யாரடி நீ? • என் இதயத்திற்கு இறகுகளைப் படைத்து உன்னைச் சுற்றியே பறக்கச் செய்கிறாய்... என் பகலையும்  இரவையும் சுருக்கி ஒரு கைப்பேசிக்குள் அடைத்துச் செல்கிறாய்... என் இலச்சிய மரத்தை பிடுங்கி வீசிவிட்டு அங்கு காதல்ச் செடியை நட்டுச் செல்கிறாய்... யாரடி நீ? • யாரும் பார்க்காத  இடம்சென்று தனிமையில் அழவைக...

என்ன பயன் | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம் | மயிலாடுதுறை மாவட்டம்

படம்
உழைப்பவர் தெருவில் கையேந்த  அரசுகள் இருந்தும் என்ன பயன்? ஆமைகள் ஆளும் இந்நாட்டில் அடிமைகள் அழுதும் என்ன பயன்? வருபவன் எல்லாம் களவாணி ஆட்சிகள் மாறி என்ன பயன்? ஊழலே எல்லாம் என்றானால் உதைக்காமல் இருந்தும் என்ன பயன்...?

மேல்முறையீடு | காதல் கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
மேல்முறையீடு  __________________ நான்  பலமுறை தோல்வியடைந்திருக்கிறேன்.. அவையெல்லாம் வலிக்கவில்லை எனக்கு.. ஆனால் இந்த  பாழாய்_போன காதல் தோல்வி மட்டும் என்னை பாடாய் படுத்துகிறது பெண்ணே... அதனால் தான் இந்த தோல்வியை எதிர்த்து  நான் மேல்முறையீடு செய்யலாமென நினைக்கிறேன்... தீர்ப்பு  எனக்கு சாதகமாய் அமைய ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா என்று உன் இதயத்திடம் கேட்டு சொல்லேன்...!!  மாயவரம் இதயராஜா மேலப்பெரும்பள்ளம் 

இப்படி வேண்டும் இந்தியா | கவிதை | கவிஞர் மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
_____________ மாய்ந்திட வேண்டும்  மாந்தர் வறுமை! தேய்ந்திட வேண்டும்  பணவெறிப் பெருமை! ஓய்ந்திட வேண்டும் மதவெறி நீதி! சாய்ந்திட வேண்டும்  மண்ணில் சாதி! • விடிந்திட வேண்டும் ஏழையர் கிழக்கு! அழிந்திட வேண்டும் வன்முறை அழுக்கு! இறந்திட வேண்டும் ஊழல் இலஞ்சம்! இனித்திட வேண்டும் இந்தியர் நெஞ்சம்!  மாயவரம் இதயராஜா மேலப்பெரும்பள்ளம்

சுதந்திரம் | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
சுதந்திரம் ________________ ஆட்சி செய்யும் யாவருக்கும் ஊழல் செய்யச் சுதந்திரம்... அதிகாரக் கரங்களுக்கு இலஞ்சம் வாங்கச் சுதந்திரம்..! சாதி மத வெறிபிடித்து சண்டை செய்யச் சுதந்திரம்! வெரட்டி வெரட்டி  ரோட்டில் வைத்து கொலைகள் செய்ய சுதந்திரம்! குழந்தைகளைக் கடத்திச் சென்று கற்பழிக்கச் சுதந்திரம்! தேசத்தை கூறுபோட்டு விற்பதற்கு சுதந்திரம்! கலவியில் கடவுள் தேடும் சாமியார்க்கு சுதந்திரம்! கல்வியை கடைவிரித்து காசு பார்க்கச் சுதந்திரம்! கற்பவர் வேலையின்றி அழுவதற்குச் சுதந்திரம்! காசுமுன் சட்டம் வளைந்து விழுவதற்கு சுதந்திரம்! வாழவே வழியில்லாத வறியவருக்கா  சுதந்திரம்? வரியினை விழுங்கி வாழும் முதலைகளுக்கே சுதந்திரம்! 16/08/2020 மாலை 6:30  மாயவரம் இதயராஜா மேலப்பெரும்பள்ளம்.

முள் | காதல் தோல்வி கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
#முள்.... ________ அன்று  ஊர்கோடி எல்லையில் உன்னை சந்திக்க ஓடோடி வந்தேன்... ஆவலோடு ஓடிவந்த என் பாதத்தில் முள் ஒன்று ஆழ பாய்ந்தது... பதறிய நீ  அழுது கொண்டே என் பாதத்தில் பாய்ந்த முள்ளினை எடுத்து விட்டாய்... இன்று அந்த நினைவுகளையெல்லாம் மறந்து செல்கிறாய்...  சரி பெண்ணே அன்று  என் பாதத்தில் பாய்ந்த முள்ளினை நீ எடுத்தாய்.. இன்று  உன்னால் என் இதயத்தில்  பாய்ந்த முள்ளினை  யாரை வைத்து நான் எடுப்பேன்? என் உயிருக்கு சேதமில்லாமல் உன் நினைவுகளை மட்டும்  பிரித்தெடுக்க  மரணத்தால் கூட முடியாதே..? மனிதர்களால் எப்படி முடியும்?     நீ இல்லாமல்  அந்த முள்ளினை எடுத்தால்  என்  இதய டயரில்  காற்று பிரிந்து  என்னை கொன்று போடும்.. இந்த முள்  என் இதய டயரில்  இப்படியே தைத்திருக்கட்டும்... நீ  திரும்பி வந்து  அதை எடுத்து விட்டு  பஞ்சர் ஒட்டும் வரை!!!

உயிரில் இனிக்கும் அமுதமே | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
பருக பருக  பசியைத்தூண்டி உயிரில் இனிக்கும் அமுதமே..!! இறுக இறுகத்  தழுவி யெந்தன் நினைவில் சுற்றும் கிரகமே..! உருக உருக  தேனில் காதல் கூடுகட்டிப் பார்க்கிறேன்.. வருக வருக  என்றுநிதம் உன்னை மட்டும் கேட்கிறேன்..!! இதழ்கள் வேண்டாம்  ருசிக்க உன்   இனிய குரலில் பேசு..! இதயச் சூட்டைத்  தணிக்க காதல்  கடலிலென்னை வீசு...! தேகம்தேடும்  காதலென்னில்  தேடிப்பார்த்தால் தோற்பாய்.. தேன் நிலவே  எந்தன் காதல் ஊரில் எங்கு பார்ப்பாய்? ச.இதயராஜா  மேலப்பெரும்பள்ளம்.

ஏமாற்றத் தழும்பு | கவிதை | மாயவரம் இதயராஜா | மேலப்பெரும்பள்ளம்

படம்
ஏமாற்றத் தழும்பு கனவென்னும் சோலையிலே நீ வருவாய் என்றென்னி உன் வரவைப் பார்த்திருந்தேன்.. பூ வாங்கி காத்திருந்தேன்! உனக்காக வாங்கி வந்த பூவனைத்தும் வாடும்முன்னே எனைப்பார்த்து மகிழ்கின்ற--உன் புன்னகை ஏன் வாடியதோ? குறிஞ்சி மலர் பூப்பதற்கு பன்னிரண்டு ஆண்டெதற்கு? உன்மூச்சுக் காற்றுப்பட்டால் ஒரு நொடியில் பூத்துவிடும்! அப்படிப்பட்ட உன்மூச்சு அனல்காற்றாய் வீசுவதா? கோபத்தீ அனலினிலே என்மனது கருக்காதா? உள்ளத்தை கொடுத்த என்னை உதாசினப் படுத்துகிறாய்! நீ இருந்த மாளிகையில் தீ வைத்து கொளுத்துகிறாய்! துன்பத்தின் முதல் எழுத்து இ ஆக மாறும் முன்னே நீ மாறிச் சென்றாய்!-துன்பம் நிலையாகிப் போச்சுதடி!! மோகனச் சிரிப்பாலே என் மனதைக் கவர்ந்தவளே முல்லைக் கொடியாய் என் உடலெங்கும் படர்ந்தவளே..-இன்று சாதித்த மகிழ்ச்சியிலே நீ கடந்து செல்கிறாய்!-உன் பித்தலாம் தெரிந்தவுடன் நான் பித்தனாகிப் போகின்றேன்!! கண்காட்டி வித்தையெல்லாம் காதலிலே காட்டிவிட்டு கண்மூடித் தனமாக  கடந்து நீ செல்கிறாய்.. ஈட்டி முனை பட்டாலும் வலிக்காத என் மனதில்-உன் ஏமாற்றத் தழும்பதுவோ ஏற்படுத்தும் வலி அதிகம்!!!

பொழுதும் சாஞ்சிடுச்சு - கவிதை - கவிஞர் மாயவரம் இதயராஜா

படம்
கடன் தொல்லை தாங்காமல் கணவன் ஓடிவிட  அவன் மனைவியின்  தேடல்...  "பொழுதும் சாஞ்சிடுச்சு " ___________ பள்ளிக்கூடம் போயிபுட்டு வீடுவந்து சேரயிலே பொண்ணுபாக்க வந்துயென்ன பொடவகட்ட வச்சவரே..  முடிச்சிக்கு ஒன்னுன்னு மூனுபுள்ள பெத்துபுட்டு கருக்கால எங்கையா  காணாம போனீரு?  பாசி போலவே படர்ந்த கதைமறந்து காசி யாத்திரதான் கால்நடையா போனீரோ? பட்டிகாட்டு பொண்ணுயிவ சளிச்சித்தான் போனானு பட்டனத்து பொண்ணுதேடி பல்லிலிச்சி போனீரோ? ஒண்டிவாழ ஒரு குடிசை இல்லயின்னு வீடு வாங்கிவர வண்டிகட்டி போனீரோ? பொந்துகட்டி வாழவச்ச கந்துவட்டிக் காரனுக்கு கன்னிவெடி வாங்கிவர காசுமீரு போனீரோ? கடனெல்லாம் கழிச்சிட்டு கால்நீட்டி திங்கனுன்னு காசுமரம் வாங்கிவர கப்பலேரி போனீரோ? உள்ளூரு சாமியெல்லாம் ஊமையாகி போச்சுன்னு வெளியூரு சாமிகிட்ட வெவரஞ்சொல்ல போனீரோ? பொட்ட மாடுகட்டி ஏரோட்ட முடியலனு எமராசங்கிட்ட தான் எருமவாங்க போனீரோ? பொழுதும் சாஞ்சிடுச்சி போனவர காணலயே.. பதறி நிக்கிரன்னு பாத்தா சொல்லுங்களேன்...!!!          மாயவரம் இதயராஜா

காதலித்துப் பார் - கவிதை - மாயவரம் இதயராஜா

படம்
காதலித்துப்பார் • காதலித்துப்பார் என்றார் என் ஆசான் காதலித்துப் பார்த்தேன்.. ம் .. என்ன இருக்கிறது இந்த காதலில் உயிரை  வருடிக்கொடுக்க உன்னதமான  ஒரே ஒரு மயிலிறகு இருக்கிறது... உள்ளங்களை ஒட்டவைக்க ஒரு சொட்டு பெவிகுயிக் இருக்கிறது!  உச்சந்தலைக்கும் உள்ளங்கால்களுக்கும் இடையில் பாய்ந்தோட  கொஞ்சம் மின்சாரம் இருக்கிறது... காதலர்களுக்கென்று உள்ளங்கை அளவில் ஒரு உலகம் இருக்கிறது... அதோடு கூட சின்னதொரு சொர்க்கம்  இருக்கிறது.. வேறென்ன இருக்கிறது? சரி  என்ன தந்ததாம் இந்த காதல்? வின்னில் பறப்பதற்கு கண்ணுக்குத் தெரியா ஒரு விமானம் தந்தது... இனியவளைச் சுற்றிவர இரண்டே இரண்டு இறகு தந்தது..  கண்களால் பேசும் முறையை  ஓரளவு  கற்றுத்தந்தது...!!  கைப்பேசிக்கு  காவடி எடுக்கச்செய்து காதல் பேச்சுக்களை வரம்பெற வைத்தது...   கனவுகளை அதிகப்படுத்தி காதல் கவிதைகளை கற்பனைக்குள் ஊற்றியது.. கலப்படம் இல்லாத இமயத்துத் தேனை இதழ்களில் கொஞ்சம் பருகச்செய்தது...  என் இலச்சியப் பறவைக்கு கால்கட்டு போட்டு காதல் காதல் என்று கூவச் செய்தது..! மோக மந்திரம்...